Your Words Define Your Life - Life Changers Training Ministry
14521
wp-singular,post-template-default,single,single-post,postid-14521,single-format-standard,wp-theme-strata,ajax_fade,page_not_loaded,smooth_scroll,,qode-theme-ver-2.6,wpb-js-composer js-comp-ver-5.4.5,vc_responsive

Your Words Define Your Life

Your Words Define Your Life

10:59 09 August in Subject Content

உங்கள் வார்த்தை தான் உங்கள் வாழ்க்கை

 

“ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது. அந்த வார்த்தை தேவனாயிருந்தது” – யோவான்1;1 

 

வார்த்தை என்ற ஒன்றே உருவாக்க மட்டுமே பிறப்பிக்கப் பட்டது. தேவன் “வெளிச்சம் உண்டாவதாக” என்று சொன்னதும் வெளிச்சம் உண்டானது.

 

சந்திரன், நட்சத்திரங்கள், பறவைகள், மிருகங்கள், செடி, புல், பூண்டு, கனிகள் எல்லாமே அவர் “உண்டாவதாக” என்று சொன்னார். உண்டானது.

 

அதனால், நாம் பேசும் வார்த்தை எவ்வளவு முக்கியம்?
இது ஒரு New level of Technology – A Christian communication தகவல் தொடர்புத் தொழில் நுட்பம் என்பதை புரிந்து கொண்டோம்.
ஆண்டவருக்கு வித்தியாசமான முறையில் ஊழியம் (Life Changers Training Ministry) பண்ண வேண்டும் என்ற வேட்கையில் பிறந்தது இந்த ஆராய்ச்சி. இதைத் தேவனே கொடுத்தார்.

 

WHY Do you need this Christian Communication?
To transform your mind first, then others’.

 

ஏன் மறுரூபமாக வேண்டும்?

 

உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபம் ஆகுங்கள்- ரோமர் 12: 2

 

தேவன் உங்கள் மனதை எப்படி எல்லாம் புதிதாக்கப் போகிறார்? எப்படி மறுரூபப்படுத்தப் போகிறார்? எந்த நிலையிலிருந்து எந்த நிலைக்கு?

 

வேதக் கொள்கைகள் எல்லாம் அனேகமாக மனிதனுடைய தன்மை மாறுதலைத் தான் குறிக்கின்றன. மனிதனுடைய மாற்றத்தை எதிர்பார்க்கின்றன.

 

மனம் திரும்புங்கள்; பரலோக ராஜ்ஜியம் சமீபமாயிருக்கிறது, என்று யோவான் சொன்னதுபோல மனந்திரும்புதலுக்கு வேதம் முக்கியத்துவம் கொடுக்கிறது. வேதக் கொள்கைகள் எல்லாம் மனிதனுடைய இயற்கையான சுபாவத்தைப்பற்றியும் மனசாட்சியைப்பற்றியும் பேசுகிறது. மக்கள் எப்படி மாறுகிறார்கள் என்பதையும், அறிவாற்றலான நடத்தை மாற்றம் பற்றியக் கொள்கைகளையும் சொல்கிறது.

 

அதோடு ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்ற கருத்துக்களை உண்மை சம்பவங்கள்மூலம் விளக்கி விட்டு, ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டி விட்டுப் போன தெய்வத்தைக் குறித்தும் விளக்கி உள்ளது.

 

ஆசீர்வாதத்தைத் தொலைத்த இஸ்ரவேலர்கள்

 

 

ஆனால் எவ்வளவு விளக்கம் இருந்தாலும் பழையபடி, மறுபடி-மறுபடி பாவத்தில் சிக்கிச் சிக்கி, ஆசீர்வாதத்தைத் தொலைத்த, நிம்மதியைத் தொலைத்த தேவசமாதானத்தைத் தொலைத்த, இஸ்ரவேலராகவே நாம் இருப்பதால், இப்பொழுதும் நடைமுறை வாழ்க்கையில், ஒரு கிறிஸ்தவன், கிறிஸ்தவள், எப்படி வாழ வேண்டும் என்பதை எங்களின் பயிற்சி வகுப்புகளும் இந்த (lifechangers.in) Website ம் கொடுக்கும்.

 

யோவான் 14:12 ல் உள்ளபடி என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்த கிரியைகளைத்   தானும் செய்வான். இவைகளை பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான். என்கிற வசனம் என்னைத் தூண்டியது. அப்படியானால், இயேசுவைப் போல நாமும் கிரியை செய்வோம் என்றும், அவர் செய்ததற்கு மேலும் செய்வோம் என்று விசுவாசிப்போம்.!!!!

 

சுவிசேஷத்தை சொல்ல எளிதான வழி
மத்தேயு 10 8.  மிக மிகப் பிடித்த வசனம்.
ஆத்தும ஆதாயம் பண்ணுவதற்கு முக்கியமான வசனம். .
” வியாதியஸ்தரை சொஸ்தமாக்குங்கள், மரித்தோரை எழுப்புங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள்’’

 

நாம் செய்கிறோமா?
தேவனே, மனிதனாக இருந்த போது, மூன்றரை ஆண்டுகள் உலகிலே சுற்றித் திரிந்தபோது அதிசயங்களும், அற்புதங்களும் நிறையச் செய்தார். வியாதியஸ்தர்களை சுகப்படுத்தினார். கூட்டம் கூட்டமாகப் பின்தொடர்ந்தார்கள். பிசாசுகளைத் துரத்தினார். மரித்தோரை எழுப்பினார். இயற்கைக்கு அப்பாற்பட்ட அதிசயங்களைச் செய்தார்.

 

இதுவல்லவா சுவிசேஷத்தை சொல்வதற்கான எளிதான வழி!

மத்தேயு 17:20 கடுகளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து நீ பெயர்ந்து சமுத்திரத்திலே தள்ளுண்டு போ என்று சொன்னாலும் அப்படியே ஆகும். என்றாரே….

 

அப்படியென்றால், கடுகளவு விசுவாசம் கூட இல்லாமல் நம்மில் பலர் இருக்கிறோமென்பது தானே அர்த்தம்?

 

அதற்கு அடிப்படையில், “அவன் அல்லது அவள் நல்ல கிறிஸ்தவராக இல்லை” என்று நாம் மற்றவர்களைக் குறைகூறாமல், “கிறிஸ்தவம் என்னிலிருந்துதான் ஆரம்பிக்கப்பட வேண்டும்” என்று நாம் அனைவரும் வைராக்கியம் கொள்ள வேண்டும்.

தேவன் வார்த்தையினால் எல்லாவற்றையும் உருவாக்கினார். ஒன்றை உருவாக்குவது எப்படி? வியாதியிலிருந்து சுகம் பெறுவது எப்படி? பிசாசுகளைத் துரத்துவது எப்படி என்று நாம் பார்க்கலாம்.

 

உங்களில் கிறிஸ்தவம் மணக்கிறதா?

 

 

ஒரு உண்மையான கிறிஸ்தவம் உங்களைச் சுற்றிலும் மணக்க வேண்டும். நீங்கள் சொல்கிற வார்த்தை, செயல்கள், நடவடிக்கை, உங்கள் முகம், அத்தனையிலும் கிறிஸ்துவின் நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம் போல மணக்க வேண்டும். உங்கள் அன்பிலே மற்றவர்கள் கிறிஸ்துவை ருசிக்க வேண்டும்.

 

பணச்சிக்கலை சமாளிக்க 20 வருடத்திற்கு மேல் ஸ்கூல், காலேஜ் போயி படிக்க சொல்லிக் கொடுத்த சமூகம், நம் பெற்றோர்கள், மனச் சிக்கலை சமாளிக்க எங்கு போய் என்ன கற்றுக் கொள்ளவேண்டும் என சொல்லித் தந்ததா? நம் பெற்றோர்கள் சொல்லிக் கொடுத்தர்களா?
வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என எங்காவது வாழ்க்கை கல்வி கற்றுக் கொடுக்கப் பட்டதா?

 

நாவின் அதிகாரத்திலே மரணமும், ஜீவனும் இருக்கிறது என்று வேதம் சொல்லுகிறது போல நாம் மரணத்தை (கவலை, துக்கம், வேதனை, மனசோர்வு, வியாதி) தேடிக்கொண்டோமா? இல்லை ஜீவன் (அன்பு, பொறுமை, சாந்தம், விசுவாசம், மன்னிப்பு) நம்மிடமிருந்து கிறிஸ்தவம் மணக்கிறதா?

 

ஒருவரை ஒருவர் சரியாகப் புரிந்து கொள்ளாததால், அன்பாக இருப்பது என்னவென்று புரியாததால், பிசாசானவன் எப்படி உள்ளே வருகிறான் என்பதை இனம் கண்டுகொள்ள, இந்த Website உதவும். இதன் மூலம் எப்படி சுகம் அடையலாம் என்றும் புரிந்து கொள்ளலாம். மேலான எண்ணங்களில் மனதைச் செலுத்தாமல், சின்னச் சின்னக் குடும்ப சண்டை, உறவுகளிடையே பிரிவு, பேதம், வைராக்கியம், மற்றும் உலக கவலைகளில் சிக்கி எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை உணர வைக்கவும் நாங்கள் உதவுவோம்.

 

இதெற்கெல்லாம், நம்முடைய சிந்தனை சரியாக இருந்தால் வாழ்க்கை சரியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அப்படியானால், சிந்தையை சீரமைக்கவேண்டும் என்று சொல்கிறோமா?

 

கிறிஸ்துவின் சிந்தை

 

 

பிலிப்பியர் 2:5 “கிறிஸ்து இயேசுவில் இருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது” என்று நமது மனம் எப்படி இயேசுவைப் போல இருக்க வேண்டும் என்பதைக் கூறுகிறது. மேலும், நீதி.23:7 ல் “அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவன் இருக்கிறான்…” என்று நம்முடைய மனம் எப்படி காக்கப்பட வேண்டும் என்றும் நாம் மனதில் எப்படி எண்ணுகிறோமோ அப்படியே நம்முடைய வார்த்தை அமையும். வார்த்தை எப்படியோ அப்படியே நம் வாழ்க்கையும் அமையும் என்றும் பைபிள் சொல்லுதே.

 

மனதை பற்றி 386 க்கும் மேல் வேத வசனங்கள் சொல்கின்றன. சிந்தையை சீரமைக்கும் பணி இங்குள்ள ஒவ்வொரு content மூலமும் கிடைக்கும். அதனால், நம்முடைய வார்த்தை தான் நம்முடைய வாழ்க்கை.

 

வார்த்தை தான் தேவன். அப்படியானால், நீங்கள் உச்சரிக்கும் ஒவ்வொரு வார்த்தையும் தேவனா? ஆ…..

 

Hallelujah..!!!



"Reach out to us and let's make things happen!"