What is Anger? - Life Changers Training Ministry
12600
wp-singular,post-template-default,single,single-post,postid-12600,single-format-standard,wp-theme-strata,ajax_fade,page_not_loaded,smooth_scroll,,qode-theme-ver-2.6,wpb-js-composer js-comp-ver-5.4.5,vc_responsive

What is Anger?

What is Anger?

09:24 27 June in Life Changers

கோபம் என்றால் என்ன?

 

கோபமா? உங்கள் ஆத்திரத்தை மறந்து அமைதியாக உட்காருங்கள். இப்போது ஒன்று முதல் பத்து வரை எண்ணவும். . .
என்ன கோபம் கூடுதா?

 

  • கோபம் ஒரு இயலாமையின் வெளிப்பாடு ஆகும்.
  • உங்க சட்ட திட்டங்களை யாரோ மீறுவதும் கோபம் தரும்.

 

உங்களைப் பற்றிய தனிப்பட்ட விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டதற்காக உங்கள் நண்பர் மீது நீங்கள் கோபமாக இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அவரது துரோகத்திற்கு எந்த காரணமும் ஏற்றுக்கொள்ள முடியாது. மக்கள் ஒவ்வொரு நாளும் கோபப்படுவதற்கான எண்ணற்ற காரணங்களில் இதுவும் ஒன்று. உணர்ச்சிகள், குறிப்பாக கோபம், நீண்ட காலமாக தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அவற்றைத் தவிர்க்கவும், உணர்ச்சிகளை ஒரு பலவீனமாகப் பார்க்கவும், அவற்றைக் கையாளவும் மேலும் இன்னும் மோசமானது என்ன வென்றால் அதைக் கட்டுப்படுத்தவும் நமக்குக் கற்பிக்கப்பட்டுள்ளது.

 

வழக்கம் போல், நான் மூல காரணத்தை ஆராய்ந்து, கோபத்திற்கு என்ன செய்வது என்பதை உங்களிடமே விட்டு விடுகிறேன். எல்லா உணர்ச்சிகளும் உங்கள் வாழ்க்கைக்கு உள் வழிகாட்டியாக செயல்படுகின்றன. எல்லாக் கோபத்திற்கும் ஒரு அர்த்தம் உண்டு.

 

கோபம் ஒரு Natural guiding system.

 

 

கோபத்தை தருபவன் பிசாசானவன் என்று நீங்க நினைச்சாலும், ஆவியானவர் உள்ளிருந்து நீங்க சரிசெய்ய வேண்டியது எதுவோ இருக்குன்னு நினைப்பூட்டுவார்.

 

நீங்கள் ஏன் கோபப்படுகிறீர்கள் என்று நினைக்கிறீர்கள்? உங்களை ஆத்திரமடையச் செய்ய பல்வேறு காரணங்கள் உள்ளன. ஆனால் அடிப்படைக் காரணம் என்று ஒன்று இருக்கும். அதுதான் கோபம் வரத் தூண்டுதலாக உள்ளது.

 

உங்களுக்கு எப்போதெல்லாம் கோபம் வரும்?

 

 

“வாழ்க்கையில் உங்கள் தனிப்பட்ட விதிகளில் ஒன்று மற்றவர்களால் அல்லது உங்களால் மீறப்படும்போதுதான்!!.”

 

மீண்டும் யோசித்து ஆராய்ந்து பாருங்கள். ஆரம்ப நாட்களில் உறவுகளில் இது மிகவும் தெளிவாகத் தெரியும். உதாரணமாக, ஒரு பையனுக்கு இது போன்ற ஒரு விதி இருக்கலாம். அவர் தனது காதலியை அழைத்தால், அவள் ஃபோனை எடுக்கவில்லை என்றால், அவள் எப்போது திரும்பி வருவாள் என்று ஒரு மெஸ்ஸேஜ் அனுப்ப வேண்டும் என்று அவன் எதிர்பார்க்கிறான். குறைந்த பட்சம் அவள் திரும்பி வரும்போது அது சாத்தியமில்லையென்றால், அவள் பிஸியாக இருந்த காரணங்களை சொல்லுவாள் என்று எதிர்பார்க்கிறான். இந்த எதிர்பார்ப்புகளுக்கு அவனுடைய சொந்தக் காரணங்கள் உள்ளன – அவளுக்கு அவனுடைய ஃபோன் கால் போயிருக்கிறதா என்பதை அவன் அறிய விரும்புகிறான்; அவள் எப்போது திரும்பி வருவாள் என்பதை அறிய வேண்டும்.

 

 

இப்படிப்பட்ட சமயங்களில் அவன் எப்போதுமே அவளுக்கு உண்மையாகத் தெரிவிப்பான்;

 

அவள் ஃபோன் காலை எடுத்து பேசினாலோ, இல்லை பிஸியாக இருப்பதை சொல்வது மூலமாகவோ, அவன் அவளுக்கு முக்கியமானவனாக இருக்கிறான் என்றும் எந்த நேரத்திலும் அவன் ஃபோனை தவிர்க்க மாட்டாள் என்ற செய்தியும் வருகிறது.

 

இந்த காரணங்கள் அவனுக்கு மிகவும் முக்கியமானவை. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் அவனது காதலி அவனுக்குத் தெரிவிக்க வேண்டும் என்பது விதியாகிறது. அவள் அதைச் செய்யாத ஒவ்வொரு முறையும் அவன் கோபமடைவான். சொல்லப் படாமலே அது விதியாக கருதப் படுகிறது அவனுக்குள்.

 

ஆனால் அந்தப் பெண் அவனைக் காயப்படுத்துவதற்காக இப்படி நடக்க மாட்டாள். அவளுக்கு இதன் முக்கியத்துவம் தெரியாமல் இருந்திருக்கலாம். மேலும் அவனுக்கு தெரிவிக்க மறந்துவிட்டிருக்கலாம். ஒவ்வொரு முறையும் பைத்தியம் பிடித்தது மாதிரி சண்டை போடுவதை விட, காதலியிடம் லேட் ஆனால் எனக்கு ஃபோன் செய்யவோ மெஸ்ஸேஜ் கொடுக்கவோ வேண்டும் என்ற விஷயங்களை அவளுக்கு தெரிவித்துக் கொண்டால் கோபத்தை தவிர்க்கலாம்.

 

அவனது விதி மீறப்பட்டுள்ளது. எனவே முதலில் அவளுக்கு இவனது இந்த சட்டம் தெரியுமா என்பதை பார்க்க வேண்டும்.

 

எவ்வளவு வலுவான காராணம் இருந்தாலும், இந்த சட்டத்திற்கு அவளும் ஒத்துக் கொள்கிறாளா என்பதையும் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் தொடர் வாக்குவாதம், கோபம், சண்டை போன்றவற்றில்தான் முடியும். அவள் அந்த மாதிரி கணக்கு ஒப்புவிக்காத குடும்ப பழக்கத்தில் வளர்க்கப் பட்டு இருக்கலாம்…

 

இது அற்பமானதாகத் தோன்றலாம், ஆனால் நீங்கள் ஒருவருக்கொருவர் தனிப்பட்ட விதிகளைத் தெரிவிக்கவும் விவாதிக்கவும் நேரத்தை எடுத்துக் கொண்டால், அது நீண்ட காலத்திற்கு உங்கள் உறவுக்கு உதவும். இதுவும் உங்கள் first circle ல் மட்டுமே செல்லும்.

 

போதுமான பயிற்சியின் மூலம், நீங்கள் எப்போது கோபப்படுவீர்கள் என்பதைக் கண்டறியவும், காரணத்தைக் கண்டறியவும் முடியும் என்பதை நீங்கள் பார்க்கத் தொடங்குவீர்கள். கோபத்தைத் தவிர்ப்பதற்கான சிறந்த வழி, மற்றவர்கள் எளிதில் மீறக்கூடிய பல விதிகள் உங்களிடம் இல்லை என்பதை நீங்கள் உணர்வுபூர்வமாக உறுதிசெய்து கொள்ள வேண்டும்.

 

“நீங்கள் கோபம் கொண்டாலும் பாவம் செய்யாதிருங்கள்” என்று தானே பவுல் சொல்கிறார்.
ஆகவே,
கோபத்தைத் தவிர்க்க வேண்டும் என்று நான் கூறும்போது, நான் அதை வழக்கமான வழியில் சொல்லவில்லை. கோபம் பொதுவாக மக்கள் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

 

ஆனால், உண்மையில் இது உங்கள் விதிகளில் ஒன்று மீறப்பட்டுள்ளது என்பதை உங்களுக்குத் தெரிவிக்கும் ஒரு சிக்னல் தான்.

 

நாம் நமது விதிகளைக் கவனித்து, ஒருவருக்கொருவர் கலந்து, அந்த விதி சாத்தியமான ஒன்றாக இருக்கும் போது அது மீறப்படாது.

 

எனவே இயற்கையான விளைவாக, கோப சமிக்ஞை உங்களுக்கு அனுப்பப்படாது.

  • கோபத்தை அதன் வேர் மட்டங்களில் நிவர்த்தி செய்வதற்கான எளிதான வழி இது என்று இப்போது புரிகிறதா?
  • கை கழுவாமல் சாப்பிடுவதை இயேசுவிடம் சீஷர்கள் சொன்னபோது, வாய்க்குள் போவது உன்னை தீட்டுப் படுத்தாது. உனக்குள்ளே இருந்து வெளியே போவது தான் தீட்டுபடுத்தும் என்றால் என்ன அர்த்தம்.
  • கோபத்தால் நாம் வெளியே சிந்தும் கசப்பான வார்த்தைகள் மற்றவர்களை காயப் படுத்தும்.
  • நினைவு இருக்கட்டும், அது முதலில் உங்களை காயபடுத்தி விட்டுத் தான் பிறகு அடுத்தவர்களை காயப் படுத்தும்.

 

கோபம் ஒரு நல்ல Powerful Emotion. அது சொல்ல வரும் செய்தி என்ன என்று கண்டு
கொண்டு அதை முன்னேற்றும் சக்தியாக, ஆக்கபூர்வமான Tool ஆக… பயன்படுத்தத்
தெரிந்தால்…. நீங்க தான் கடவுளின் அம்சம்.



"Reach out to us and let's make things happen!"