
5 senses Intro
ஐம்புலன்கள் (5 Senses) – உறவைப் பேணும் மொழி
நீதி 4 ல் பிள்ளைகளே, நீங்கள் தகப்பன் போதகத்தைக் கேட்டு, புத்தியை அடையும்படி கவனியுங்கள். …… அப்பொழுது பிழைப்பீர்கள்
என்று எழுதி இருக்கிறது.
தகப்பன் பேச்சை இப்பொழுது கேட்கும் பிள்ளைகள் குறைந்து கொண்டே வருகின்றனர். அவர்கள் கேட்கும் படி, தகப்பன்களால் சொல்லத் தெரியாததும் ஒரு காரணம்.
ஏனெனில், வாழ்க்கைக் கல்வி 95% மக்கள் கற்றுக் கொள்ளவில்லை.
நீதி 4:7 ஞானமே முக்கியம், ஞானத்தைச் சம்பாதி; என்னத்தைச் சம்பாதித்தாலும் புத்தியைச் சம்பாதித்துக்கொள்.
கடவுள் நமக்கு கொடுத்தது 5 அறிவு அல்லது ஐம்புலன்கள் என்று சொல்லுவோம். அதன் வழியாக நாம் கற்றுக் கொள்வது புத்தி. இந்த 5 அறிவையும் எப்படி, எங்கு, எவ்வளவு, எப்போது பயன் படுத்துவது என்பதைப் பற்றியது ஞானம்.
முதலில் இந்த 5 அறிவு அல்லது 5 புலன்கள் பற்றி கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.
ஐம்புலன்களும் நமது அனுபவங்களும்
ஐம்புலன்களையும் அனைவரும் ஒரே மாதிரியாகப் பயன் படுத்துவதில்லை. குடும்பத்தில், கணவன் ஒரு புலனை அதிகமாகவும், மனைவி வேறொரு புலனை அதிகமாகவும் பயன்படுத்தும்போது, அதைப்பற்றிய விழிப்புணர்வு இல்லாதபோது, அங்கு அவர்களுக்கிடையில் உள்ள புரிதல் (Understanding) சற்று குறைகிறது.
வேதத்தில் 5 புலன்கள் பற்றி இருக்கிறதா?
நாம் இந்த உலகத்தில் எல்லாவற்றையும் அனுபவிப்பது நமது ஐம்புலன்கள் வழியாகவே! தேவன் நமக்குக் கொடுத்த ஐம்புலன்கள் எவை என்று உங்களுக்குத் தெரியும் தானே? அதாவது, நாம் கண்கள் மூலம் காண்கிறோம் (Visual sense), காதுகள் மூலம் கேட்கிறோம் (Hearing sense), நாக்கு மூலமாக ருசிக்கிறோம் (Taste sense), மூக்கு மூலமாக நுகர்கிறோம் (Smell sense), கைகளால் தொடும்போது, தொடு உணர்ச்சி (Feeling Sense) உணருகிறோம். இவை ஐந்தும்தான் ஐம்புலன்களாவன.
மத்தேயு 7:7 ல் “கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக்
கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்;
தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்.” என்றும்,
(கேட்பது, பார்ப்பது, தொடுவது)
சங்கீதம் 34: 8 “ல் கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்”
என்றும், (ருசிப்பது)
உன்னதப்பாட்டு 4:10ல் “திராட்சரசத்தைப் பார்க்கிலும் உன் நேசம் எவ்வளவு மதுரமாய் இருக்கிறது” என்றும், (ருசிப்பது).
உன்னதப்பாட்டு 1:3 ல் “உமது நாமம் ஊற்றுண்ட பரிமளதைலமாய் இருக்கிறது” என்றும் எழுதப்பட்டுள்ளன. (முகர்வது)
கேட்பது, (hearing) பார்ப்பது, (seeing) தொடுவது, (touch or feel) ருசிப்பது, (Taste), முகர்வது (Smell) இவ்வைந்தும் மேல்கண்ட வசனங்களில் இருப்பதைப் பார்த்தீர்களா? அதாவது, இது போல, நாம் நமது ஐம்புலன்களையும் பயன்படுத்தும்போது, நமக்கு ஏற்படும் அனுபவத்தின் சிறப்பைப் பற்றிப் பார்ப்போம்.
புலன்களின் முக்கியத்துவத்தை சங்கீதம்: 115:5-7 ல் காணலாம். விக்கிரகங்களைப் பற்றிச் சொல்லும்போது “அவைகளுக்கு வாயிருந்தும் அறிவுபூர்வமாகச் சிந்தித்துப் பேசாது; அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது; அவைகளுக்கு காதுகள் இருந்தும் கேளாது; அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது; அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது; அவைகளுக்குக் கால்களிருந்தும் நடவாது; தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது”’ என்கிறார் தாவீது.
நாம் அனைவரும் ஐம்புலன்களையும் பயன்படுத்திக் கொண்டிருந்தாலும், பலரும் ஏதாவது ஓரிரு புலன்களுக்கு மட்டுமே மிகவும் முக்கியத்துவம் கொடுத்துத் தெரிந்தெடுத்துப் பயன்படுத்துவது வழக்கம்.
Though we all have these 5 senses, each of us have our own preferred senses. We use a few of them predominantly. Most of us may use one or two senses 80 to 90 % of the times. We may use other senses 2 to 7%.
உதாரணமாக,
- சாப்பாட்டுல பிரியமா இருப்பவர்கள் அதிகமா Taste sense ஐப் பயன் படுத்துவார்கள். அவர்களின் பேச்சிலும் செயலிலும் காட்டுவார்கள்.
- தன்னை அழகா காட்ட விரும்புகிறவர்கள் Visual sense ஐ அதிகமாக பயன் படுத்துவார்கள். அவர்களின் பேச்சிலும் செயலிலும் காட்டுவார்கள்.
ஒருவரைப் பார்த்தவுடன் சிறிது நேரத்திலேயே அவர்கள் எந்தப் புலனை அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள் என்று எப்படி கண்டுபிடிப்பது?
உதாரணம்: சிலர் பேசும்போது “இங்க பாருங்க” (காண்பது) என்று அடிக்கடி சொல்லுவார்கள்.
மற்றும் சிலர் பேசும்போது நான் சொல்றது புரியுதா? (கேட்பது) என்று சொல்வார்கள்.
வேறு சிலர் பேசும்போது “நான் வந்து நாளைக்கு ஊருக்குப் போகணும். அதுல வந்துட்டு ஒரு பிரச்சினை. நீங்க வந்து (உணர்தல்) டிக்கெட்டை மாத்தி book பண்ணித் தர முடியுமா?”
இதை இன்னும் கொஞ்சம் விவரமாக நான் சொன்னால் புரிய சுலபமாக இருக்கும்.
உதாரணம்: நீங்கள் ஊருக்குப் போகும்போது, காணும் புலனை அதிகமாக உபயோகப்படுத்தும் அம்மா. “பார்த்துப் போப்பா.” என்பார்கள்.
கேட்கும் புலனை அதிகமாக உபயோகப்படுத்தும் அம்மா.” போய்ட்டு போன் பேசுப்பா.” என்பார்கள்.
உணர்ச்சி புலனை அதிகமாக உபயோகப்படுத்தும் அம்மா.” பத்திரமா போய்ட்டு வாப்பா.” என்று சொல்வார்கள்.
ஆச்சரியமாக இருக்கிறதல்லாவா?
இக்கலையை எங்கெல்லாம் பயன்படுத்தலாம்?
- மற்றவர்களுடன் சம்பாஷணை செய்ய
- அவர்களோடு உறவை பலப்படுத்திக் கொள்ள
- இழந்த உறவுகளைத் திருப்பிக் கொள்ள
- தேவன் கொடுத்த ஆசீர்வாதங்களை அடைய
இதில், முக்கியமான காரியம் என்னவெனில், நாம் நமக்கு விருப்பமான புலன் (Any of the 5 Senses) என்று ஏதாவது ஒன்றைத் தெரிந்து எடுத்து (Choose) க் கொள்கிறோம் என்பது தான். அது நாம் அறியாமலேயே நடக்கிறது.
நினைவுகளின் அடுக்குகள் (Thought Structure)
நாம் எப்படி ஒருவருடன் ஒருவர் தகவல்களைப் பரிமாறிக் கொள்கிறோம்? ஐந்து புலன்கள் வாயிலாக. எந்த ஒரு அனுபவமானாலும் (Experience) அதில் படமோ, சத்தமோ, உணர்வுகளோ, ஒரு கட்டிடமும், இரும்புக் கம்பிகளும் எப்படி ஒரு அடுக்கு அமைப்பாக உள்ளதோ, அப்படியே அடுக்கப்பட்டு இருக்கும். இதுபோலவே, எண்ணங்களுக்கும், நினைவுகளுக்கும் கூட ஒரு அடுக்கு அமைப்பு உண்டு. (Structure)
கல்லூரியில் முதல் அனுபவத்தைச் சொல் என்றால், நானும், அப்பாவும், அம்மாவும், காலேஜின் பெரிய (பார்த்தல்-seeing sense) ஆடிட்டோரியத்தில், சேரில் அமர்ந்திருந்த காட்சி (பார்த்தல்) நினைவுக்கு வருகிறது, அங்கு ஏ.சி. இல்லாததால் பெரிய, பெரிய (பார்த்தல்) ராட்சச ஃபேன்கள் காற்றை (Feeling) அள்ளி வீசியது சுகமாக இருந்தது. மாணவ, மாணவியர்களின் பெயர்களை வரிசையாக மைக்கில் (கேட்டல்-hearing sense) கூறினார்கள்.
கல்லூரிபற்றிய அறிமுக சிறப்புரை (presentation) நடந்து கொண்டே இருந்தது, மதியம் வரை சென்றது. மதியம் அங்குள்ள கேண்டீனுக்கு சென்று சாப்பிட்டோம். பிரியாணி மிக ருசியாக இருந்தது (ருசித்தல்). சாப்பிட்டு முடித்தபின் வெளியே வரும்போது காபி டே – காபி (café- coffeeday) வாசனை கமகமன்னு (Smell) கூப்பிட்டது(கேட்டல்-Hearing) அப்பொழுது தான் பிரியாணி சாப்பிட்டு இருந்தாலும், வாசனை இழுத்ததால் சூடாக (உணர்தல்- feeling) ஒரு Coffe யும் குடித்து விட்டுத் தான் வந்தோம். (taste)
பாருங்கள்.! ஒரு சின்ன அனுபவத்தில் உள்ள அடுக்கமைப்பை (structure) கவனித்தீர்களா? எண்ணங்களின் வடிவமைப்பைப் புரிய முடிந்ததா?
இப்போது வயதுக்கேற்றபடி 25 வருடம், 50 வருடம் எத்தனை விதமான அடுக்குகள் உள்ளே பதிவாகி இருக்கும் மனுஷனுக்குள்ளே.!
உங்கள் Thought structure என்ன?
கொஞ்சம் நினைத்துப் பாருங்களேன்.! ஒரு விழா, மாநாடு, இசை நிகழ்ச்சி, நடன நிகழ்ச்சி, ஆண்டுவிழா, காலேஜ் ஓரியெண்டேஷன், இதில் ஏதாவது ஒன்று முடிந்த பின்பாக,
அந்த நடத்துனர் (காம்பியரர்) போட்டு இருந்த ட்ரஸ், “என்னா ட்ரஸ்? சும்மா ஹாலிவுட் ரேஞ்சில் இருந்தது இல்லையா?”
- “அவரோட வாய்ஸ் என்னா டைனமிக்? ரொம்ப நல்லா இருந்துச்சு. பேசிக்கிட்டே இருந்தப்ப, திடீரென்று இரண்டு வரி பாடினாரே.. அப்பா… புல்லரிச்சது”
- “சூப்பர் சிங்கர் குழந்தைகள் எல்லோரும் சினிமா ஸ்டார் மாதிரி அழகாக டிரஸ் பண்ணி இருந்தார்கள். நீ பார்த்தியா?”
- “ஸ்கூல் ஆண்டுவிழா. சும்மா அள்ளிப்போட்டு annual report வாசித்தார், எப்படி கணீரென்று இருந்துச்சு அவரோட குரல்?”
- “இந்தக் கல்யாணம் மாதிரி 50 வகையிலே கிராண்டா (buffet) டின்னர் டேஸ்ட் எங்கேயும் சாப்பிட்டதே இல்லை.”
- “லிப்டில் ஏறி ஜவுளிக்கடையில் யாரோ உள்ளே நுழைந்ததும் சும்மா கும்முனு பர்ப்யூம் வாசனை ஆளைத் தூக்கியது. கேட்டிருப்பேன் என்ன brand? என்ன செண்ட்? வாய்வரை வந்துச்சு. சே…… கேட்டால் டீசன்டாக இருக்காது” என்று கேட்காமல் விட்ட ஞாபகம்.
இது மாதிரி, பல விஷயம். இந்த எண்ணங்களின் பதிவேட்டில் அடுக்குகளில் சிலவற்றை ரொம்ப, ரொம்ப ஞாபகமாக இருப்பதற்கு காரணம் உங்களிடம் அந்தப் புலன் கொஞ்சம் தூக்கலாக இருப்பது தான்.
ஏன் Life ல பிரச்சினை வருகிறது?
உங்கள் கண்ணாடி போட்டால் (கலர், சைஸ், அழகு, இடம், பொருள், சுத்தம் பார்த்தல்) அடுத்தவர்களும் இதேகண்ணாடியைப் போட்டுக்கொண்டு பார்ப்பதாகக் கற்பனை செய்தால் அங்குப் பிரச்சினை வரலாம். எப்படி உங்கள் கண்ணாடி அடுத்தவர்களுக்கு சேராதோ, அதேபோல, உங்கள் கண் முன்னாடி நடக்கும் விஷயங்களில், நீங்கள் use பண்ணும் sense ஐத் தான் மற்றவர்களும் உபயோகப்படுத்துகிறார்கள் என்று நீங்கள் நினைப்பதுதான் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம்.
இன்னும் கொஞ்சம் விவரமாக சொல்லுகிறேன்.
உங்கள் மனைவிக்கு நீங்கள் (Visual sense) ஒரு கலர்ஃபுல் சேலை வாங்கிக் கொடுப்பீர்கள். அவர்களுக்குப் பிடிக்காது. அவ்வளவு ஆர்வமில்லை. அதைவிட உங்கள் மனைவி (Hearing sense) கேட்பதில், பேசுவதில், ஆர்வம் உள்ளவராக இருந்தால், ஒரு மொபைல், மியூசிக் சி.டி. மேன் இது மாதிரி வாங்கிக் கொடுத்தால் அசத்தலாம். இப்படித்தான் கருத்துக்களில் வேறுபாடுகள் ஆரம்பிக்கின்றன. மேற்கண்ட உதாரணங்களில் எண்ணங்களின் அடுக்குகளில் (Thought structure) உள்ள அனுபவம், படம், சப்தம், ருசி, உணர்வு, வாசனை, இவைகளால் கட்டாயம் அடுக்கப்பட்டிருக்கும்.
அதோடு ஒரு உணர்வு (Feeling) சேர்ந்திருக்கும். இந்த உணர்வு தான் எல்லா சந்தோஷங்களுக்கும், துக்கங்களுக்கும் காரணம்.
நிறைய விஷயங்களில், நாம் எந்தப் புலனை நமது விருப்பமான புலனாகத் தெரிந்தெடுத்துள்ளோமோ, அதைப் பொறுத்து, நமது குணாதிசயங்கள் வேறுபடும். யாக்கோபு 1:8 “இரு மனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவாயிருக்கிறான்.”. என்கிறது.
அதாவது, நமது ஒரே மனம் இருவேறு சமயங்களில் முற்றிலும் வேறுபட்ட, எதிர்மறையான சிந்தனைகளைக் கொண்டிருக்கின்றன. அப்படியிருக்கும்போது, குடும்பத்தில் உள்ள இரண்டு நபர்கள் வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்டிருப்பது புரிந்து கொள்ளக்கூடிய ஒன்றுதானே?
இந்த ஒரு புரிதல் ஒரு குடும்பத்திற்குள் இருந்தால், அவர்களுக்குள் சண்டை சச்சரவுகள் வர வாய்ப்புண்டா? இந்த வேறுபாட்டை எப்படி அறியவைப்பது? எப்படிப் புரியவைப்பது? என்பதுவே இது போன்ற சூழ்நிலையில், மனநல ஆலோசனையின் நோக்கமாக இருக்கும். அவர்களுக்குள் இருக்கின்ற பிரச்சினைகளின் விவரங்களுக்குள் (content) செல்லத் தேவையில்லை. இந்தப் புரிதலை மட்டும் உணரச் செய்து விட்டால்போதும். அவர்களுக்குள் இருக்கும், இது போன்ற, அனைத்து வேறுபாடுகளும் அவர்களை ஒன்றும் செய்யாது. இந்தப் புரிதலுக்குப் பின், இரண்டு பேருக்கும் மன வேற்றுமை இருக்காதா என்றால், இல்லை; அதே வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். ஆனால், இப்போது இரண்டு பேர்களுக்கும் இடையில் இருக்கும் வேறுபாடுகுறித்த விழிப்புணர்வு இருவருக்கும் இருப்பதால், குறைந்த பட்சம் யாராவது ஒருவர் ஒவ்வொரு வேறுபாட்டிலும் அநுசரித்துச் சென்று, வாழ்க்கையைப் பசுமை நிறைந்ததாக வாழக் கற்றுக்கொள்வார்கள்.
இதுவே ஒரு சபையாக இருந்தால், பாஸ்டர் பிரசங்கம் பண்ணும் போது, எல்லா புலன்களுக்குரிய வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும். அப்போது, எல்லா விசுவாசிகளுக்கும் அது பயனளிக்கும். கருத்துக்கள் சென்று அடையும். மிக மிகப் பிரபலமானவர்கள் எல்லாரும் இந்த 5 புலன்களையும் சமமாகப் பயன்படுத்துபவர்களாக இருப்பர்.
புத்தகம் எழுதும்போது 5 புலன்களுக்குரிய வார்த்தைகளைப் பயன்படுத்தி எழுதும்போது அனேக வாசகர்களைக் கவரலாம்.
மனஆலோசனை கொடுக்கும்போது கூட 5 புலனுக்குரிய வார்த்தைகளைப் பிரயோகித்தால் சீக்கிரம் தொடப்படுவார்கள்.
இப்ப நல்லாக் கவனிங்க. நான் இப்பொழுது Deep ஆ சொல்லப் போற subject ஐ இந்தியாவில் தமிழ் ministry ல் இந்த content ஐ முதல் முறையாக introduce பண்ணுகிறோம்.
கர்த்தரைப் பற்றிப் பேசாமல் என்னென்னவோ பேசுகிறார்களே இது என்ன Ministry என்று முனகிக்கொண்டு முன்னேறாமல் இருப்பவர்களுக்கு இந்த content உதவாது. ஆழமாகப் பார்க்கும் போதுதான் இது எல்லாமே வேதத்திலிருந்துதான் வந்தது என்பது புரியும்.
ஆனால், உங்கள் முன்னால் வரும் இந்த வாய்ப்பை சற்று Open mind டோட கவனித்து, Analyze பண்ணினால் முன்னேறவேண்டும் என்று நீங்கள் முடிவு எடுத்தால், இது உங்களுக்கு ஒரு special gift ஆக இருக்கும். Because, I am sharing my victory with you. நான் ஜெயித்த பல விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
இப்ப சொல்லப் போகும் வசனம்,
நீதி: 3: 4: தேவனுடைய பார்வையிலும், மனுஷருடைய பார்வையிலும் தயை, நற்புத்தியும் பெறுவாய்.
மனுஷருடைய தயை, நல்ல உறவு … பெற… 5 senses மூலம் அறிவு, 6 th sense மூலம், ஞானம், wisdom எப்படி வரும்? என்று 3D world க்கானவைகளை கற்றுக் கொடுப்போம்.
தேவனுடைய தயை, அவருடன் நல்ல உறவு… 4D க்கானவைகளைக் கற்றுக் கொடுப்போம்.
காணப்படாதவைகளின் நிச்சயம், நம்பக்கூடாதவைகளின் உறுதி, இல்லாதவைகளை இருக்கிறவைகளாக அழைக்கும் தேவன்.
இந்த வசனங்கள் எல்லாம் 4D யைக் குறிக்கின்றன.
அது என்ன 4D?
ஒரு dot . 0 dimension
ஒரு கோடு 1st dimension
ஒரு photo நீளமும், அகலமும் இருந்தால், 2nd dimension
நிஜக் கண்ணில் பார்ப்பது, 3rd dimension,
நீளம், அகலம், உயரம். இருந்தால் அது.
நிஜக்கண்ணில் பார்க்கும் objects, மனுஷங்க, டேபிள், சேர்… இது போன்ற எதுவானாலும் 3rd dimension.
4th Dimension ஆவிக்குரிய கண்ணில் பார்ப்பது, ஆவிக்குரிய காதில் கேட்பது, ஆவியில் உணருவது இதெல்லாம், 4th Dimension.
அதிசயம் நடப்பது, மன்னா, மீன் வரவழைப்பது, வியாதி சுகம் ஆவது, குருடர்கள் பார்வை அடைவது, இயேசு கடலில் நடப்பது, ஒலிவமலையில் மோசே பார்த்தது, பிலிப்பு ஒரு இடத்தில் மறைந்து வேறு இடத்தில் தரிசனம் ஆவது, சாத்ராக், மேஷாக், ஆபத்னெகோ போன்றவர்கள் கடுமையாக சூடு ஏற்றப்பட்ட சூழையில் கருகாமல் இருந்தது, இதுபோன்ற விஷயங்கள். எல்லாம். 4th, 5th,6th என பல dimensions வரை போனவர்கள். இதெல்லாம் இருக்கு பைபிளில். அந்த details க்குள் நாம போக வேண்டாம்.
இது உண்மை என்று உங்க மனசை நாங்க தயார் பண்றோம்.
எனக்கு இதுவரை 4 surgeries, சர்ஜெரி இல்லாம சுகம் ஆகி இருக்கிறேன். 3 வருடமாக இருந்த Rhematoid arthritis. Negative ஆகி என் blood test ல்லாம் மாறிவிட்டது. மாத்திரை, மருந்து எல்லாம் தூக்கி எறிந்து விட்டேன்.
நாம் வாழுவது 3-dimensional world.
தேவன் நம்மை 4th dimensional world க்கு அழைக்கிறார். நீங்க எல்லோரும் இந்த உலகத்தான் அல்ல, அல்ல ந்னு
யோவான்17: 16 சொல்றதை கேட்டு, நம்மில் பலர் எதோ பல்லை கடிச்சிட்டு இந்த 60 to 80, 90 வயது வரை வாழ்க்கை முடித்து விட்டு, செத்து பரலோகம் போய் நாம வாழப் போகும் வாழ்க்கையை தான நம்பி இருக்கோம். நோ. இங்கேயே வேற realm ல வாழும் வாழ்வை எப்படி access பண்ணுவது? அது தான்… இந்த உலத்துக்கு அதிபதி வருகிறான்… பிசாசு என்றால்… 3D world ல் அவன் அதிபதி. அவனை போல வாழாமல், எப்படி வாழனும்ன்னு 4D க்கு அதிபதி இயேசு வாழ்ந்து காட்டிட்டு போனாருல்ல அது 4th Dimensional world.
அதுக்கு ஒரு சின்ன உதாரணம் சொல்லி இதை முடிக்கிறேன். சென்னையில் மழை வெள்ளம். நாங்க குடி இருந்த ரோடு 3 பக்கம் தண்ணீரால் சூழ்ந்து இருந்தது. வீட்டில் இருந்து 50 அடி தூரத்தில் 5 அடி அளவு தண்ணீர். கரண்ட் போனது, tank ல் தண்ணீர் தீர்ந்தது. ஆனால், ஒரு பக்கம் ஒரு சொட்டு கூட ரோட்டில் நிற்கவில்லை. திருச்சி போக சேலம் வரை போயி, திருச்சி போனோம். காரில் தப்பி ஓடினோம். இதே உலத்தில் இருந்தாலும், நீங்க மட்டும் வேற realm access பண்ணலாம்.
ஒரு விஷயம் உங்க பக்கத்துல உள்ளவங்களுக்கு கிடைக்காவிடிலும் உங்களுக்கு கிடைக்கும்… நீங்க கேக்கும் விதத்தில் கேட்க மட்டுமே பழக வேண்டும்.
எங்க Class க்கு வாங்க…..